Wednesday, March 25, 2026

உறவுகள் தொடர்கதை - காட்சி 2

  உறவுகள் தொடர்கதை
திரைக்கதை 

காட்சி 2


மிராசுதார் பொன்னம்பலம் வீடு. 

செவ்வாய், ஒரு வயதான பெண்மணியுடன் முற்றதில் அமர்ந்து அரிசி புடைத்துக் கொண்டிருக்கிறாள். 

வாசலிலிருந்து பொன்னம்பலம் வீட்டுக்குள் வருகிறார். 

செவ்வாய் எழுந்து நிற்க, ‘நீ உக்காரு புள்ள’ என்று சொல்லி விட்டு அவர் உள்ளே போகிறார். 

உள்ளிருந்து அவர் வெளியே வரும்போது, மீண்டும் செவ்வாய் எழுந்து நிற்க முயல, அவர் அவளைக் கையமர்த்துகிறார்.

பொன்: வூட்டுக்குப் போனதும், ஒங்கப்பனை இங்கே வந்துட்டுப் போகச் சொல்லு.  

செவ்: சரிங்கையா!

பொன்: நாளைக்குக் காலையில தம்பி மதுரையிலேந்து வருது. டேசனுக்குப் போய் அவனை அழைச்சுக்கிட்டு வரணும். அதனால, வண்டி மாடுகளை ரெடி பண்ணி வைக்கச் சொல்லு. காலையில மூணு மணிக்கே கெளம்பினாத்தான் ரயில் வரதுக்கு முன்ன டேசனுக்குப் போய்ச் சேர முடியும். சாயந்திரமா என்னை வந்து பாத்துட்டுப் போகச் சொல்லு. சில விஷயங்கள் சொல்லணும்.

செவ்: சின்னையாவுக்குப் படிப்பு முடிஞ்சு போச்சுங்களா?

பொன்: இல்ல. இன்னும் ஒரு வருஷம் பாக்கி இருக்கு. இப்ப லீவுக்கு வரான்.

(மறுபடி உள்ளே போகிறார். 

போகும்போது கூடத்தில் மாட்டியிருக்கும் தம்பியின் புகைப்படத்தைப் பார்க்க, செவ்வாயும் அந்தப் பக்கம் ஒரு கணம் பார்த்து விட்டுத் தன் வேலையைத் தொடர்கிறாள்.)

காட்சி 1

No comments:

Post a Comment

உறவுகள் தொடர்கதை - காட்சி 7

  உறவுகள் தொடர்கதை திரைக்கதை  காட்சி 7 பொழுது சாய்ந்து விட்ட நேரம்.  மண்ணெண்ணெய் விளக்குகளின் மங்கலான வெளிச்சம்.  முன்பு சிலர் சீட்டாடிய அதே...